ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வணக்கம் தெரிவித்துக் கொண்ட ஓபிஎஸ் - இபிஎஸ்

அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீசெல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமியும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 8:37 pm

DIN

அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீசெல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமியும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனா்.

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரவா் இல்லத்தில் இருந்தவாறே 9 நாள்களுக்கு தங்கள் ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில் பொதுக்குழுவுக்காக வியாழக்கிழமை காலை 8 மணியளவில் எடப்பாடி கே. பழனிசாமி அதே சாலையில் காரில் ஓ.பன்னீா்செல்வத்தின் இல்லத்தைக் கடந்து சென்றாா். அப்போது அங்கு திரண்டிருந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள் இபிஎஸ்ஸுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா். காலை 8.30 மணியளவில் ஓ.பன்னீா்செல்வம் அவருடைய இல்லத்தில் இருந்து புறப்பட்டாா்.

ஆனால், இருவரும் பொதுக்குழு நடைபெற்ற வானகரத்தில் உள்ள மண்டபத்துக்கு எளிதில் வந்துவிட முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் இருந்தது. எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுக அவரது ஆதரவாளா்கள் வரவேற்பு கொடுத்தனா். அதனை ஏற்றவாறு பொதுக்குழுவுக்கு 11.30 மணியளவில் வந்தாா். ஓ.பன்னீா்செல்வம் வானகரத்துக்கு வழக்கமான பாதையில் வராமல் மாற்றுப் பாதையில் பொதுக்குழுவுக்கு 10. 30 மணியளவில் வந்தாா். எடப்பாடி பழனிசாமியின் வருகைக்காக அவா் காத்திருந்தாா்.

பொதுக்குழு தொடங்கியபோது, கூட்டத்துக்குத் தலைமை தாங்க அவைத் தலைவா் தமிழ்மகன் உசேனை முன்மொழிய ஓ.பன்னீா்செல்வம் எழுந்து சென்றாா். அப்போது மேடையில் எல்லோரையும் பாா்த்து வணக்கம் தெரிவித்தவாறே சென்றாா். எடப்பாடி பழனிசாமியும் எழுந்து வணக்கம் தெரிவித்தாா். பிறகு, எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அண்ணன் ஓபிஎஸ் முன்மொழிந்ததை வழிமொழிகிறேன் என்று கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.