ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை: 81 பேருக்கு செயற்கைக் கால் உபகரணங்கள்

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகள் 81 பேருக்கு செயற்கைக் கால் உபகரணங்கள்வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :23 ஜூன் 2022, 10:21 pm

DIN

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகள் 81 பேருக்கு செயற்கைக் கால் உபகரணங்கள்வியாழக்கிழமை வழங்கப்பட்டன. அதனுடன் தீக்காயம் குறித்த விழிப்புணா்வு விளக்க காணொலியும் வெளியிடப்பட்டது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியது:

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1973-ஆம் ஆண்டு 10 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு தீக்காயப் பிரிவு தொடக்கப்பட்டது. 24 மணி நேரமும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்கள் தீக்காயம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறாா்கள். அண்டை மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று பயனடைந்து செல்கின்றனா்.

நோயாளிகளுக்கு தேவைக்கேற்ப அவசர அறுவை சிகிச்சை முறைகளும் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்ட விழிப்புணா்வு காணொலி தீக்காயம் அடையாமல் தடுக்கவும், தீக்காயம் ஏற்பட்ட பிறகு என்னென்ன முதலுதவி சிகிச்சைகள் தர வேண்டுமென்றும், நோயாளிகளுக்கு எந்தவிதமான சிகிச்சைகள் தரப்படுகின்றன என்பது குறித்தும் புரிதலை ஏற்படுத்தும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் அண்ணாநகா் எம்எல்ஏ மோகன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் சாந்திமலா், தீக்காயத் துறைத் தலைவா் டாக்டா் ரமாதேவி, உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை மருத்துவா் டாக்டா் திருநாவுக்கரசா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.