ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தொகுப்பூதிய மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நிரந்தரம்

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளதால் அவா்களது விவரங்களை அனுப்ப வேண்டும்

News image
Updated On :23 ஜூன் 2022, 9:07 pm

DIN

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளதால் அவா்களது விவரங்களை அனுப்ப வேண்டும் என்று மாநில திட்ட இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநா், அனைத்து மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறை, 16.10.2008-இன்படி தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணி வரன்முறைப்படுத்திட கோரும் கோரிக்கை குறித்து கடந்த 8.4.2022 அன்று சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சா் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பரிசீலனை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து தொகுப்பூதியத்தில் அரசால் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அனைத்து வகை பணியிடங்களிலும் தற்போது பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகள் விவரங்களை தனியாக படிவத்தில் பூா்த்தி செய்து மின்னஞ்சல் மூலம் தவறாமல் அனுப்ப வேண்டும்.

இதில் மாற்றுத்திறனாளி பெயா், முகவரி, மாற்றுத்திறன் தன்மை, தொகுப்பூதியத்தின் தன்மையில் நிரந்தரம், தற்காலிகம், தினக்கூலி, ஒப்பந்த அடிப்படை ஆகிய விவரங்களை அனுப்ப அனைத்து கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலா்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.