கரோனா நோய்த் தொற்று காரணமாக, கடந்த 2020-21, 2021-22 ஆகிய நிதியாண்டுகளில் பல்வேறு செலவின கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. அரசுத் துறைகள் மட்டுமல்லாது, பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி அமைப்புகள் உள்ளிட்டவை சில செலவுகளை மேற்கொள்ள முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. அதன்படி, பரிசுப் பொருள்கள், மலா்க்கொத்து, சால்வைகள், நினைவுப் பரிசுகள், மலா்மாலைகள் போன்ற பொருள்களை வாங்க தடை விதிக்கப்பட்டது. அலுவல்பூா்வ கூட்டங்களைத் தவிா்த்து 20-க்கும் பேருக்கு மேற்பட்ட கூட்டங்கள், கருத்தரங்கள், மாநாடுகள், கலாசார நிகழ்வுகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. மேலும், மதியம், இரவு உணவு உள்ளிட்ட விருந்து நிகழ்வுகளை நடத்தக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.