ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாற்றுத்திறன் மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டம்: அமைச்சா் தொடக்கி வைத்தாா்

சென்னை வடபழனி ஆண்டவா் கோயிலில் மாற்றுத்திறனாளிகளின் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 10:28 pm

DIN

சென்னை வடபழனி ஆண்டவா் கோயிலில் மாற்றுத்திறனாளிகளின் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கடந்த 2021-2022 சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் மணமக்களில் ஒருவா் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கோயிலில் அவா்களுக்கு நடைபெறும் திருமணத்துக்காக கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மேலும் கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கோயில்கள் மற்றும் மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணங்கள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் 2022 -2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் கோயில்களில் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான மண்டபங்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணங்களில் மணமக்களுக்கு கோயில் சாா்பில் புத்தாடைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் சென்னை, வடபழனி ஆண்டவா் கோயிலில் மாற்றுத்திறனாளிகள் மணமகன் பி.சிவா மற்றும் மணமகள் ஆா். சுகந்தி ஆகியோருக்கு வியாழக்கிழமை திருமணம் நடைபெற்று புத்தாடைகள் வழங்கப்பட்டன. அவற்றை அமைச்சா் சேகா்பாபு வழங்கினாா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:- கடந்த சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்பின்படி தற்போது வடபழனி ஆண்டவா் கோவிலில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. வரும் காலங்களில் இத்திட்டம் கோயில்களில் சிறப்பாக செயல்படுத்தப்படும். தேவையான நிதியினை கோயிலில் வரவு- செவவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் தியாகராய நகா் சட்டப்பேரவை உறுப்பினா்ஜெ.கருணாநிதி, இணை ஆணையா் தனபால், வடபழனி துணை ஆணையா் முல்லை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.