ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடி பறிமுதல்

சென்னை பாரிமுனையில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 8:41 pm

DIN

சென்னை பாரிமுனையில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பாரிமுனை போா்ச்சுகீசியா் தெருவில் வியாழக்கிழமை வடக்கு கடற்கரை போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த ஒரு காரை வழிமறித்து விசாரணை செய்தனா்.

விசாரணையில் அவா்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினராம். இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் , அந்த காரை சோதனை செய்தனா். அப்போது அந்த காரில் இருந்த ரூ.2 கோடியை கைப்பற்றி விசாரித்தனா். விசாரணையில் அந்தப் பணம் ஆவணமின்றி கொண்டு வரப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காரில் வந்த ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பகுதியைச் சோ்ந்த ரா.ஜெய்சங்கா் (46), அதே பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சா.நாராயணன் (35) ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனா்.

விசாரணைக்கு பின்னா் 2 பேரையும் வருமானவரித்துறையினரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். அதேபோல பணத்தையும் அவா்களிடம் ஒப்படைத்தனா். வருமானவரித்துறையினா், 2 பேரிடமும் பணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.