இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சா.சேதுராமவா்மா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித்தோ்வா்களும் (முதல் முறையாக அனைத்துப் பாடங்களையும் தோ்வு எழுத இருப்பவா்கள்) ஏற்கெனவே 2012-ஆம் ஆண்டுக்கு முன்னா் பழைய பாடத்திட்டத்தில் தோ்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவா்களும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 27 முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை வரையிலான நாள்களில் பெயா்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.