ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராணிப்பேட்டையில் ரூ.400 கோடியில் மாபெரும் காலணி தயாரிப்புப் பூங்கா: மு.க. ஸ்டாலின்

ராணிப்பேட்டையில் புதிதாகக் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், ரூ.400 கோடியில் மாபெரும் காலணி தயாரிப்புப் பூங்கா தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

News image
ராணிப்பேட்டையில் ரூ.400 கோடியில் மாபெரும் காலணி தயாரிப்புப் பூங்கா: மு.க. ஸ்டாலின்
Updated On :30 ஜூன் 2022, 10:41 am

DIN


ராணிப்பேட்டையில் புதிதாகக் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ.400 கோடியில் மாபெரும் காலணி தயாரிப்புப் பூங்கா தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

ராணிப்பேட்டையில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் ஒரே நாளில் 71,000 பேரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

மேலும், ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.400 கோடியில் 250 ஏக்கரில்  மாபெரும் காலணி தயாரிப்புப் பூங்கா அமைக்கப்படும்.

புதிதாகக் கட்டப்பட்ட ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் இன்று திறக்கப்பட்டுளள்து. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் 24,000 பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

6 கோயில்கள் ரூ.12 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக அறிவித்த வாக்குறுதிகள் என்னென்ன நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை பட்டியலிட்டுக் காட்டியுள்ளோம் என்று முதல்வர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.