நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இனி எனக்கு ஏன் விளம்பரம்? எதிர்க்கட்சிகளுக்கு ஸ்டாலின் பதிலடி

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் அரசியலில் உள்ள எனக்கு இனி ஏன் விளம்பரம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image

இனி எனக்கு ஏன் விளம்பரம்? முதல்வர் மு.க.ஸ்டாலின்

Updated On :30 ஜூன் 2022, 11:36 am IST


ராணிப்பேட்டை: ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் அரசியலில் உள்ள எனக்கு இனி ஏன் விளம்பரம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராணிப்பேட்டையில் புதிதாகக் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ.400 கோடியில் மாபெரும் காலணி உற்பத்தி பூங்கா தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

ராணிப்பேட்டையில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 50 ஆண்டுகளுக்கும் மேல் அரசியலில் உள்ள எனக்கு இனி ஏன் விளம்பரம் என்று கேள்வி எழுப்பினார்.

அதாவது, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளிக்கும் வகையில் அவ்வாறு கூறினார்.

நரிக்குறவர் வீட்டுக்குச் சென்று விளம்பரம் தேடிக் கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்ததற்கு பதிலளித்த ஸ்டாலின், நரிக்குறவர் இன மக்களுக்கு திமுக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் அரசியலில் உள்ள எனக்கு இனி ஏன் விளம்பரம். 

திமுக அரசு ஆட்சிக்கு வந்த போது, முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட பள்ளி புத்தகப் பைகள் வழங்கப்படாமல் இருந்தன. அவற்றை அளிக்க வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால், அவற்றை பயன்படுத்தாமல் போனால் 17 கோடி ரூபாய் அரசுக்கு வீண் செலவு ஏற்படும். பணம் வீணாகும். பரவாயில்லை முன்னாள் முதல்வர்களின் படங்களுடனே பைகளை வழங்கலாம் என்று கூறினேன். இது பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். விளம்பரம் எனக்குத் தேவையில்லை. விளிம்பு நிலை மக்களுக்குத் தேவையான அனைத்தையும் தமிழக அரசு செய்து வருகிறது.

போய்ச் சேர வேண்டிய இடத்துக்குச் செல்ல கையில் காசில்லையே என்று கலங்கி நிற்கும் போது, செலவில்லாமல் பேருந்தில் ஏறிச் செல்லும் பெண்களுக்கு என் முகம்தான் நினைவில் வரும். பிறகு எனக்கு ஏன் விளம்பரம் என்றும் ஸ்டாலின் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.