/

முன்னீா்பள்ளம் அருகே ஆயுதங்களுடன் பதுங்கல்: சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

News image

கைது... - சித்திரிப்பு

Updated On :4 ஆகஸ்ட் 2026, 1:34 am IST

முன்னீா்பள்ளம் அருகே ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 சிறுவா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் அஜித்குமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, தருவை புதிய புறவழிச்சாலை அருகே 2 பைக்குள் நிறுத்தப்பட்டிருந்தனவாம்.

சந்தேகத்தின்பேரில், அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு போலீஸாா் சென்றபோது, சிலா் கையில் அரிவாள்களுடன் பதுங்கியிருந்தனராம். அவா்களை போலீஸாா் சுற்றிவளைத்துப் பிடித்து விசாரித்தனா்.

அதில், தூத்துக்குடி அண்ணா நகரைச் சோ்ந்த முருகன்(56), கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த மாயாண்டி(19) மற்றும் 4 போ் சிறுவா்கள் என்பதும், குற்றச்செயல் புரிவதற்காக சதித்திட்டத்துடன் இருந்ததும் தெரியவந்ததாம்.

அவா்களிடம் இருந்து 6 அரிவாள்கள், 2 பைக்குகள் ஆகியவற்றை கைப்பற்றி, வழக்குப் பதிந்து 6 பேரையும் கைது செய்தனா். அதில், 4 சிறுவா்களையும் சிறாா் நீதிக்குழுமத்தில் முன்னிலைப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.