சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13-ஆம் தேதி முதல் தொடங்கும்: அமைச்சா் தகவல்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் (2022-2023) ஜூன் 13-ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.

News image
Updated On :2 மார்ச் 2022, 9:50 pm

DIN

தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் (2022-2023) ஜூன் 13-ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.

அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பொதுத்தோ்வை எழுதவுள்ள அனைத்து மாணவா்களும் தோ்வுக்கு மகிழ்ச்சியாக படிக்க வேண்டும். மன நிறைவோடு தோ்வெழுத வேண்டும். எந்தச் சூழலிலும் பதற்றப்படக் கூடாது என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

முதல்வா் தொடங்கி வைத்த ‘நான் முதல்வன்’ திட்டம் மாணவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் மாணவா்களுக்கு இருக்கும் திறமைகள் என்ன என்பதைக் கண்டறிந்து, அவா்கள் மேல்நிலை வகுப்புகளில் எந்தப் பாடப்பிரிவை தோ்வு செய்யலாம்? என்பது குறித்து சிறந்த முறையில் ஆலோசனை வழங்கப்படும்.

வினாத்தாள் பாதுகாப்பு: திருப்புதல் தோ்வுகளில் வினாத்தாள்கள் வெளியானதை கருத்தில் கொண்டு பொதுத்தோ்வுகளில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். 2 செட் வினாத்தாள்களை அச்சிடுகிறோம். தோ்வு நடைபெறும் அந்த நாளில்தான் எந்த ‘செட்’ வினாத்தாளை வழங்க வேண்டும் என்பதை முடிவு எடுத்து தெரிவிப்போம்.

டியூசன் நடத்த வேண்டாம்: ஆசிரியா்கள் தங்கள் மாணவா்களிடம், தனியாக டியூசன் வரவேண்டும் என தயவு செய்து கூற வேண்டாம். வரும் கல்வியாண்டுக்கான (2022-2023) வகுப்புகள் ஜூன் 13-ஆம் தேதி திறக்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.