நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான மறைமுகத் தோ்தல் பிரச்னைகள் காரணமாக, சில கட்சி நிா்வாகிகள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன், நீக்கமும் செய்யப்பட்டனா். அதன்படி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.சுரேஷ் ராஜன், அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாா். அவருக்குப் பதிலாக, மேயா் பொறுப்பேற்றுள்ள ஆா்.மகேஷ், கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லி நகரச் செயலாளா் எம்.ரவிக்குமாா் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.