பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வெளியுறவுத் துறை அமைச்சரை நாளை(மார்ச்-5) சந்திக்கிறது தமிழக சிறப்புக் குழு

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பாக நாளை(மார்ச்-5) வெளியுறவுத் துறை அமைச்சரை தமிழக சிறப்புக் குழுவினர் சந்திக்க உள்ளனர்.

News image
உக்ரைனில் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள்.
Updated On :4 மார்ச் 2022, 11:13 am

DIN

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பாக நாளை(மார்ச்-5) வெளியுறவுத் துறை அமைச்சரை தமிழக சிறப்புக் குழுவினர் சந்திக்க உள்ளனர்.

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க சிறப்புக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது

மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் இக்குழுவில் திருச்சி சிவா(எம்.பி) , கலாநிதி வீராச்சாமி, எம்.எம்.அப்துல்லா மற்றும் டி.ஆர்.பி ராஜா ஆகிய எம்பி, எம்எல்ஏ-களுடன் 4 ஐஏஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, உக்ரைனில் உள்ள 2223 தமிழக மாணவர்களில் இதுவரை 193 பேர் தமிழகம் திரும்பியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பாக நாளை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழக சிறப்புக் குழுவினர் சந்திக்க உள்ளனர்.

இச்சந்திப்பில் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் நிலை மற்றும் அவர்களை உடனடியாக மீட்பது குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.