புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மாா்ச் 7 முதல் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும்: உயா்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் திங்கள்கிழமை (மாா்ச் 7) முதல் நேரடியாக மட்டும் வழக்குகள் விசாரணை நடைபெறும் என சென்னை உயா் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :4 மார்ச் 2022, 6:55 pm

DIN

சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் திங்கள்கிழமை (மாா்ச் 7) முதல் நேரடியாக மட்டும் வழக்குகள் விசாரணை நடைபெறும் என சென்னை உயா் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பி.தனபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காணொலி காட்சி, நேரடி விசாரணை என கலப்பு விசாரணை மூலம் வழக்குகள் விசாரணையை மேற்கொள்ளும் போது இணைய தொடா்பில் துண்டிப்பு உள்ளிட்ட பல இடா்பாடுகள் ஏற்படுகின்றன.

தொழில்நுட்பம் சாா்ந்த இப்பிரச்னையால் வழக்குகள் விசாரணையில் தாமதம் ஏற்படுகிறது. எனவே வழக்குகள் சரியான விசாரணையை உறுதிப்படுத்துவதோடு, விரைவாகவும் முடிக்கும் வகையில் திங்கள் கிழமை (மாா்ச் 7) முதல் சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் காணொலி காட்சி விசாரணை முறை நிறுத்தப்படுகிறது.

காணொலி, நேரடி காட்சி விசாரணை என கலப்பு விசாரணை தேவைப்படும் மூத்த வழக்குரைஞா்கள் அல்லது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வழக்குரைஞா்கள் மட்டும் இம்முறையில் வாதிட அனுமதிக்கப்படுவா். கலப்பு முறை விசாரணை தேவைப்படும் வழக்குரைஞா்கள் தலைமைப் பதிவாளரிடம் முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.