திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

முதல்வர் ஸ்டாலினுடன் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலை. பேராசிரியர் சந்திப்பு

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஆரோக்கியசாமி பால்ராஜ் சந்தித்துப் பேசினார்.

News image
Updated On :5 மார்ச் 2022, 3:29 pm

DIN

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஆரோக்கியசாமி பால்ராஜ் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச்செயலகத்தில், அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆரோக்கியசாமி பால்ராஜ் சந்தித்துப் பேசினார்.
பேராசிரியர் ஆரோக்கியசமி பால்ராஜ், கம்பியில்லா தகவல் தொழில் நுட்பத்தில் பல்வேறு முக்கியமான கண்டுபிடிப்புகளை படைத்து, உலகளவில் விருதுகள் பெற்றுள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதினையும் பெற்றுள்ளார்.

இச்சந்திப்பின்போது, பேராசிரியர் ஆரோக்கியசாமி பால்ராஜ், தமிழ்நாட்டில் உயர் அளவிலான தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் அதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்துதல் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும், உயர் கல்வி, தொழில், திறன்மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் போன்ற பல துறைகளை ஒருங்கிணைத்து முயற்சிகள் மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இச்சந்திப்பின்போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.