சென்னை: தமிழர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் திமுக அரசு காப்பாற்றும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருவாடுதுறை டி.என். ராஜரத்தினம் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்,
நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் உக்ரைனில் சிக்கியிருந்த மாணவர்களை மீட்க குழு அமைக்கப்பட்டது. உக்ரைனில் இருந்து மாணவர்கள், தமிழர்கள் என 2 ஆயிரம் பேரை மீட்டு வந்துள்ளோம். தமிழர்கள் எங்கிருந்தாலும் திமுக அரசு அவர்களை காப்பாற்றும்.
மேலும் தமிழர் என்றால் ஒரு உணர்வு வரும் எனவும், அது உள்ளூர் தமிழர் என்றாலும் சரி உக்ரைனில் உள்ளவராக இருந்தாலும் சரி என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.