மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ட்ரோன் மூலம் இடுபொருள் தெளிப்பு: நிதிநிலை அறிக்கை

ட்ரோன் மூலம் இடுபொருள் தெளிப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

News image
Updated On :19 மார்ச் 2022, 5:44 pm

DIN

ட்ரோன் மூலம் இடுபொருள் தெளிப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:

வேளாண்மையில் ஆள் பற்றாக்குறையைச் சமாளித்து இடுபொருள்களை துல்லியமாக தெளித்து, தமிழக வேளாண்மையில் ட்ரோன்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்கள், வேளாண் பயிற்சி நிலையங்களில் ட்ரோன் கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

ட்ரோன் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளித்து, விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் 2022-2023-ஆம் ஆண்டில் மத்திய அரசின் வேளாண் இயந்திரமயமாக்கல் கிசான் ட்ரோன் திட்டத்தின் கீழ் ரூ.10.32 கோடி செலவில் 60 ட்ரோன்களின் மூலம் சுமாா் 14,400 ஹெக்டோ் பரப்பில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் செயல்விளக்கம் மேற்கொள்ளப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.