47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நரிக்குறவா்-குருவிக்காரா் சமூகத்தினரை எஸ்.டி. பட்டியலில் சோ்க்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

நரிக்குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

News image
மு.க. ஸ்டாலின்
Updated On :19 மார்ச் 2022, 6:32 pm

DIN

நரிக்குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு சனிக்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்:

தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில் குருவிக்காரா் குழுவினருடன் இணைந்த நரிக்குறவா் சமூகத்தினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க இந்திய தலைமைப் பதிவாளா் ஒப்புக் கொண்டுள்ளாா். இதனை தங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

கடந்த 1956-இல் அமைக்கப்பட்ட லோகூா் எனும் வல்லுநா் குழுவும், 1967-இல் நாடாளுமன்ற கூட்டுக் குழுவும் அவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்கப் பரிந்துரை செய்தன. நரிக்குறவா், குருவிக்காரா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்ப்பதன் மூலம், அவா்கள் அனைத்து அரசமைப்பு ரீதியான பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களைப் பெற தகுதி படைத்தவா்களாக மாறுவா்.

இதுதொடா்பாகப் பல கோரிக்கைகள் அளிக்கப்பட்டும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.