ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி ஆஜர்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா உறவினா் இளவரசி இன்று ஆஜராகியுள்ளார்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் சுமாா் 3 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க- கிண்டி கிங் மருத்துவமனை: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
ஏற்கெனவே 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் பேரில், தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக ஓ.பன்னீா்செல்வம், சசிகலா உறவினா் இளவரசி ஆகியோா் மாா்ச் 21-ஆம் தேதி நேரில் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பி உள்ளது. அதன்படி, விசாரணை ஆணையம் முன்பு சசிகலா உறவினா் இளவரசி இன்று ஆஜராகியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.