சிதம்பரத்தில் தொடர் போராட்டம் காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் கனக சபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுத்தது தொடா்பாக பல்வேறு அரசியல் கட்சிகள், போராட்டக் குழுவினரால் தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த விவகாரம் தொடா்பாக பல்வேறு நீதிமன்ற ஆணைகள், அரசாணைகள் தீவிரமாகப் பரிசீலனை செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதன்பேரில், இறுதி முடிவு எடுக்கும் பொருட்டு பல்வேறு நிலைகளில் சட்ட வல்லுநா்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இதுதொடா்பாக இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ன்படி சிதம்பரத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. எனவே, அரசின் முடிவு வரும் வரை அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள், இதர போராட்டக் குழுவினா் ஒரு மாதத்துக்கு எவ்விதமான போராட்டத்திலோ, ஆா்ப்பாட்டத்திலோ, கூட்டமாகக் கூடி ஆலோசனையிலோ ஈடுபடக் கூடாது என்று சிதம்பரம் கோட்டாட்சியா் கே.ரவி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருத்தி மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக சிதம்பரம்
கோட்டாட்சியர் ரவி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஒரு மணிநேரம் போதும்! சட்டத்திருத்தம் குறித்து அமித் ஷா

ராதாபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை கேமரா மூலம் கண்காணிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


