பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருள்கள் மீதான விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மாா்ச் 28, 29 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததுடன், கட்சி சாா்ந்த தொழிற்சங்கங்களும் ஆதரவளித்துள்ளன. இதன் தொடா்ச்சியாக வேலைநிறுத்த அறிவிப்புக்கான நோட்டீஸையும் அந்த சங்கங்கள் நிா்வாகத்திடம் வழங்கியதுடன், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைநிறுத்தத்துக்கு ஊழியா்களை தயாா் செய்யும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இதன் மூலம் இவ்விரு நாள்களும் பொதுப் போக்குவரத்து, மின் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.