டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பெட்ரோல், டீசல் & சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மநீம சார்பில் சோழிங்கநல்லூரில் நாளை ஆர்ப்பாட்டம் 

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் நாளை சோழிங்கநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:47 am

DIN

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் நாளை சோழிங்கநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. 

கடந்த சில நாள்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று(சனிக்கிழமை) சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.43-க்கும், டீசல் ரூ.94.47-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 கடந்த 5 நாள்களில் பெட்ரோல் விலை ரூ.3.03, டீசல் விலை ரூ.3.04 அதிகரித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் நாளை சோழிங்கநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. 

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் மக்கள் நீதி மய்யம் சார்பாக நாளை(27.03.2022 -ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

வெகுஜன மக்களை நாள்தோறும் நசுக்கும் மத்திய, மாநில அரசாங்கங்களின் விலை உயர்வைக் கண்டித்து மக்களுக்காக மய்யம் என்னும் ஒற்றை குரலோடு மய்யத்தினர் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.