தொழிற்சாலை அபகரிப்பு வழக்கு: ஜெயக்குமார் ஆஜர்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று ஆஜரானார்.

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று ஆஜரானார்.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர், ரூ. 5 கோடி மதிப்பிலான தன்னுடைய தொழிற்சாலையை அபகரித்ததாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனு விசாரணையில், ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி கடந்த மார்ச் 11 ஆம் தேதி உத்தரவிட்டார்.
அதன்படி இவ்வழக்கில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று ஆஜரானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...