தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தருமபுரம் ஆதீனத்துடன் பேசி முதல்வர் முடிவு காண்பார்: அமைச்சர் சேகர்பாபு

தருமபுரம் ஆதீனத்துடன் தமிழக முதல்வர் பேசி, பட்டினப்பிரவேசம் குறித்து விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

News image

தருமபுரம் ஆதீனத்துடன் பேசி முதல்வர் முடிவு காண்பார்: அமைச்சர் சேகர்பாபு

Updated On :4 மே 2022, 6:08 am

DIN

சென்னை: தருமபுரம் ஆதீனத்துடன் தமிழக முதல்வர் பேசி, பட்டினப்பிரவேசம் குறித்து விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் ரத்து செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் சேகர்பாபு அளித்த விளக்கத்தில், பட்டினப் பிரவேசம் குறித்து ஆதீனங்களுடன் 3 மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடத்தப்பட்டது. பல்லக்கில் தூக்கும் நிகழ்வு மே 22ஆம் தேதிதான் நடைபெறும். எனவே, இது குறித்து வரும் 22ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால், தருமபுரம் ஆதீனத்துடன் தமிழக முதல்வர் பேசி, விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். சிலர் தாங்கள் செய்த தவறுக்காக பல்லக்கில் தூக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதை அரசியலாக்கப் பார்க்கிறார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.