வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பொதுத் தேர்வு அறையில் முகக்கவசம் கட்டாயமில்லை

தேர்வு அறையில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

News image
ராதாகிருஷ்ணன் விளக்கம்
Updated On :5 மே 2022, 3:04 am

DIN

தேர்வு அறையில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம், புதுவையில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு 3,119 மையங்களில் இன்று தொடங்கவுள்ளது. இந்தத் தோ்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.

இதற்கிடையே, மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் பெயரில் சுற்றறிக்கை வெளியானது. இது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் பெயரில் வெளியான அறிக்கை போலியானது என்றும், மாணவர்கள் தேர்வு அறையில் முகக்கவசம் அணிவது கட்டாமில்லை என்றும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.