செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4 நாள்களில் மொத்தம் 972 பேர் பரிசோதிக்கப்பட்டதில் கல்லூயில் இதுவரை 72 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க- கேஜிஎஃப் நடிகர் காலமானார்: ரசிகர்கள் இரங்கல்
முன்னதாக சென்னை ஐஐடியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை நேற்று வெளியிட்டது.
அதில், புதிதாக 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 34 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.