முறைகேடு: அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் கே.என். நேரு

மாநகராட்சியில் செய்யாத பணிகள் செய்ததாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.
கோவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.5.59 கோடி மதிப்பீட்டில் 9 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு, அமைச்சர் செந்தில் பாலாஜி.
கோவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.5.59 கோடி மதிப்பீட்டில் 9 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு, அமைச்சர் செந்தில் பாலாஜி.


கோவை: மாநகராட்சியில் செய்யாத பணிகள் செய்ததாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

கோவையில் மாநகராட்சி அலுவலகத்தில்  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.5.59 கோடி மதிப்பீட்டில் 9 முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் ரூ. 49.62 கோடி மதிப்பீட்டில் 263 புதிய திட்டங்கள் தொடக்க விழா, சாதனை நிகழ்வு புகைப்பட கண்காட்சி உள்ளிட்டவையை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, மாநகராட்சியில் இந்த ஆண்டு புதிய திட்டங்கள் ரூ. 24 ஆயிரம் கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது எனவும் கோவை மாநகராட்சிக்கு ரூ.590 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதே போல பில்லூர் குடிநீர் திட்டம்  ரூ.780 கோடி செலவில் ஒரு ஆண்டில் நிறைவடையவுள்ளது என தெரிவித்தார். 

ஸ்மார்ட் சிட்டி திட்டம் மந்தமாக உள்ளது என்றார்கள், அதை இன்று பார்வையிட்டோம் என தெரிவித்தவர், சிறுவாணி அணை தொடர்பாக கருணாநிதி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தப்படி தண்ணீர் தரவில்லை. இது குறித்து தமிழக முதல்வர் கேரளம் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லை. இனி அதிகாரிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பெருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். 

மாநகராட்சியில் செய்யாத பணிகளை செய்ததாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும். அதைப்போல ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் முறைகேடுகள் உள்ளதா என்பதை அதிகாரி நியமிக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அறிக்கை இன்னும் வரவில்லை. எங்கு தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் ஐந்து முக்கியமான சாலைகளை இணைக்கும் விதமாக ரூ.145 கோடியில்  திட்டம் தொடங்கப்பட உள்ளது. கோவை, மதுரை, சென்னை போன்ற இடங்களிலும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணி தொடர்பாக ஹைதராபாத் சென்று அதிகாரிகள் பார்வையிட்டு வந்துள்ளனர். கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கப்படும் எனவும் அதேபோல குப்பையை மறு சுழற்சியும் செய்து வருகிறோம் என கே.என். நேரு கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com