பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

இந்தி திணிப்பை எதிர்த்து  ஜிப்மர் முன் திமுக முற்றுகை:  4 எம்எல்ஏக்கள் உள்பட 200 பேர் கைது

இந்தி திணிப்பைக் கண்டித்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4  எம்எல்ஏக்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News image

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்

Updated On :1 பிப்ரவரி 2024, 2:42 pm IST


புதுச்சேரி: இந்தி திணிப்பைக் கண்டித்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4  எம்எல்ஏக்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து, ஜிப்மர் எதிரே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திமுக மாநில அமைப்பாளர் ஆர்.சிவா எம்எல்ஏ தலைமை வகித்தார். அவைத்தலைவர் எஸ்பி. சிவக்குமார், எம்எல்ஏக்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவரான ஆர்.சிவா எம்எல்ஏ பேசியதாவது:
புதுச்சேரியில் அடக்கு முறைகளை கையாண்டு வரும் ஜிப்மர், அடுத்த கட்டமாக இந்தி மொழியை திணிக்கத் தொடங்கியுள்ளது. ஜிப்மர் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அலுவலக மொழி 1976 ஆம் ஆண்டு சட்ட விதியை குறிப்பிட்டு, மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவலக மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாராளுமன்ற குழு அளித்துள்ள பரிந்துரையின்படி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து அலுவலக பதிவேடுகள், பணியாளர் புத்தகம், பணியாளர் பதிவுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே இவை அனைத்தும் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இது வன்மையாக கண்டிக்கதக்கது. தரமான சிகிச்சை அளிப்பதில் புகழ் பெற்று இருந்த ஜிப்மர் நிர்வாகம், தற்போது கீழ்த்தரமான அரசியல் செய்து வருகிறது. இந்தி திணிப்பு என்பது தரமான சிகிச்சையை கேள்விக்குறியாக்கும்.

எனவே, இந்தி திணிப்பை கைவிட வேண்டும், புதுச்சேரி மக்கள் புறக்கணிக்கப்படாமல் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தில் தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களையும் நோயாளிகளுக்கு வழங்க வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஜிப்மரில் உள்ள மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களிலும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

இதனையடுத்து ஜிப்மர் மருத்துவமனையை முற்றுகையிட முயன்ற ஆர். சிவா உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள், 200-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.