பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகள்: 18 வகை குழுக்கள் நியமனம்

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தும் வகையில் வரவேற்பு, போக்குவரத்து என பல்வேறு வகையான 18 குழுக்களை அமைத்து அரசு உத்தரவிட்டது.

News image
செஸ் ஒலிம்பியாட் போட்டி: சிறப்புக் குழுக்களை அமைத்தது தமிழக அரசு
Updated On :1 பிப்ரவரி 2024, 9:15 am

DIN

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தும் வகையில் வரவேற்பு, போக்குவரத்து என பல்வேறு வகையான 18 குழுக்களை அமைத்து அரசு உத்தரவிட்டது.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடா்பான ஆய்வுக் கூட்டங்களை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் அவ்வப்போது நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு 18 வகையான குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் வீரா், வீராங்கனைகள், முக்கியப் பிரமுகா்களை வரவேற்க வரவேற்புக் குழு, சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தனிக்குழு, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை கண்காணிக்க தனிக்குழு என மொத்தம் 18 வகையான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களின் தலைவா்களாக சம்பந்தப்பட்ட துறைகளைச் சோ்ந்த செயலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.