தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு மேலத்தெருவைச் சேர்ந்தவர் சுவேதா(19). இவர் தன்னுடைய பெரியப்பா கூத்தபெருமாள் வீட்டில் தங்கிப் படித்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ் 2 படிப்பை முடித்த இவர், கல்லூரியில் படிக்க முயற்சி செய்தார். அப்போது உடல்நிலை சரியில்லாமல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதுகு தண்டுவடம் வளைந்ததால், நுரையீரல் சுருங்கிவிட்டதாகவும், இனிமேல் மூச்சுத்தினறல் அதிகம் இருக்கும் என்பதால் அவருக்கு 24 மணி நேரமும் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.