மகனுக்கான தாயின் போராட்டம் வென்றது: குஷ்பு

மகனுக்கான ஒரு தாயின் போராட்டம் வென்றுள்ளது என பேரறிவாளன் விடுதலை குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். 
குஷ்பு
குஷ்பு
Published on
Updated on
1 min read


மகனுக்கான ஒரு தாயின் போராட்டம் வென்றுள்ளது என பேரறிவாளன் விடுதலை குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், தனது மகனை விடுவிப்பதற்காக தாயார் அற்புதம்மாள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்போராட்டம் நடத்தினார். 

உண்மையிலேயே தன் மகனுக்காக எல்லா அமைப்புகளுக்கும் எதிராகப் போராடிய தாயின் எழுச்சியூட்டும் கதை இது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று (மே 18) உத்தரவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com