பேரறிவாளன் விடுதலைக்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று வெளியான தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் பா.ரஞ்சித் : அற்புதம்
இயக்குநர் சீனு ராமசாமி : 31 ஆண்டுகள் போராடி ஒரு தர்மத்தாய் வெற்றி பெற்றார்.
மாரிசெல்வராஜ்: மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அம்மா என்று இயக்குநர் மாரிசெல்வராஜ் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் நவின்: தமிழர்கள் மகிழ்ச்சியில் இன்று என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்
இயக்குநர் ராஜுமுருகன்: பேரறிவாளன் விடுதலை... ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான நீதியின் வெற்றி. ஒரு தாயின் 30 வருட போராட்டத்தின் வெற்றி. துணைநின்ற தமிழக அரசு, வழக்கறிஞர்கள், தோழர்களுக்கு நன்றியும் வாழ்த்தும்! என்று பதிவிட்டுள்ளார்.
31 ஆண்டுகள் போராடி
ஒரு தர்மத்தாய் வெற்றி பெற்றார்.