சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 100-ஐ தொட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் இன்று ஒரு கிலோ தக்காளிக்கு ரூ. 10 உயர்த்தப்பட்டதால் ரூ. 100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் தேரோட்டம்
இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள சில்லரை வியாபாரக் கடைகளில் தக்காளியின் விலை மேலும் அதிகரித்து விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.
பலத்த காற்று மற்றும் வரத்து குறைந்துள்ளதால், தக்காளியின் விலை தொடர்ந்து 20வது நாளாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.