பாரம்பரியம் மிக்க மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்திற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் சக்கரபாணி, பாரம்பரிய நெல் ரகங்களை அரசின் சிறப்பு அங்காடிகளில் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் உள்ள 286 சேமிப்புக் கிடங்குகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.