வாணியம்பாடி: சாலை இல்லாத மலை கிராமம்; சடலத்தை டோலி கட்டி எடுத்து செல்லும் அவலம்

வாணியம்பாடி அருகே 60 ஆண்டுக் காலத்திற்கு மேலாக சாலை வசதியில்லாத மலைக் கிராமத்தில், இறந்தவரின் உடலை டோலி கட்டி எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 
வாணியம்பாடி: சாலை இல்லாத மலை கிராமம்; சடலத்தை டோலி கட்டி எடுத்து செல்லும் அவலம்
Published on
Updated on
1 min read

வாணியம்பாடி அருகே 60 ஆண்டுக் காலத்திற்கு மேலாக சாலை வசதியில்லாத மலைக் கிராமத்தில், இறந்தவரின் உடலை டோலி கட்டி எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமத்திற்கு கடந்த 60 ஆண்டிற்கும்  மேலாக சாலை வசதி இல்லாத மலைக் கிராமமாக உள்ளது. இந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சாலை வசதி கேட்டு பலமுறை போராட்டங்கள் நடத்தியும் பல்வேறு கோரிக்கை மனுக்களை அரசுக்கு அனுப்பி வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. 

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 7 கிலோமீட்டர் தூரம் கிராம மக்கள் தற்காலிக சாலை அமைத்துச் சென்று வந்தனர். அதுவும் கடந்த வாரம் பெய்த மழை காரணமாக சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 37). இவர் பெங்களூரில் வேலை செய்து வந்தார். அவர் சிறுநீரக தொற்று காரணமாக நேற்று இறந்து விட்டார். அவரது உடலைச் சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்து வந்தனர். 

மலைக் கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் பிரேதத்தைத் தூளி கட்டி உறவினர்கள் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மலைக் கிராமத்தில் அடக்கம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com