கேரள அரசின் டிஜிட்டல் அளவீடைக் கண்டித்து கம்பத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கேரள அரசு டிஜிட்டல் முறையை பயன்படுத்துவதை கண்டித்து கம்பத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கேரள அரசின் டிஜிட்டல் அளவீடைக் கண்டித்து கம்பத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Published on
Updated on
1 min read

கம்பம்: தமிழக-கேரள எல்லைப் பகுதிகளை அளவீடு செய்ய கேரள அரசு டிஜிட்டல் முறையை பயன்படுத்துவதை கண்டித்து கம்பத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பொன். காட்சிக்கண்ணன் தலைமை தாங்கினார். தவமணி முன்னிலை வகித்தார். 

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சிதம்பரம் ரவீந்திரன், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தலைவர் ஈசன் முருகசாமி, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், ராதா, செல்லத்துரை, ரஞ்சித் உள்ளிட்டோர் கேரள அரசைக் கண்டித்து பேசினர். 

ஆர்ப்பாட்ட முடிவில் கேரள எல்லை குமுளி நோக்கி செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து களைந்த போக செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com