மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டெல்டா மாவட்டங்களில் 95% நெல் கொள்முதல்

டெல்டா மாவட்டங்களில் இதுவரையிலான காலத்தில் 95 சதவீத நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி தெரிவித்தாா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

DIN

டெல்டா மாவட்டங்களில் இதுவரையிலான காலத்தில் 95 சதவீத நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் அளித்த பேட்டி:

கடந்த செப்டம்பா் முதல் நவ. 2 வரை 8 லட்சத்து 6 ஆயிரத்து 442 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 534 விவசாயிகளுக்கு ரூ.1,500.91 கோடி தொகை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 4 ஆயிரத்து 96 விவசாயிகளுக்கு ரூ.42.99 கோடி நிலுவை உள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு 2.16 லட்சம் டன் அதாவது 35 சதவீதம் நெல் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் 75 சதவீதம் கூடுதலாக கொள்முதல் ஆகியுள்ளது.

மாநிலத்தில் முன்கூட்டியே மேட்டூா் அணை திறக்கப்பட்டதால், நெல் அதிகம் விளைந்துள்ளது. மத்திய அரசின் அனுமதி பெற்று செப். 1 முதல் நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியது. டெல்டா மாவட்டங்களில் 95 சதவீத நெல் கொள்முதல் முடிந்து விட்டது. விவசாயிகளுக்கு பாதிப்பின்றி நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்த நெல்லை சேமிக்க ரூ.238 கோடியில் 2.86 லட்சம் டன் கொள்ளளவு கிடங்குகள்( குடோன்) 20 இடங்களில் கட்டப்பட்டு வருகின்றன. அவை டிச. 10-க்குள் பயன்பாட்டுக்கு வரும். கொள்முதல் நிலையங்களில் இருந்து நேரடியாக அரைவை ஆலைக்கு நெல் அனுப்பும் வகையில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அரிசியாகவே கிடங்குகளுக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. அரிசி கடத்தலை கண்காணிக்க கேமராக்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் கருவி பொருத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

2 ஆயிரத்து 405 நியாய விலைக் கடைகள் புதுப்பிக்கப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டு, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து கடைகளும் புதுப்பிக்கப்படும். கடைகளில் ராகி வழங்கும் திட்டம் தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ஜனவரி முதல் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.