துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி! மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

வீட்டுக்குள் புகுந்த 7 அடி கருநாகம் பிடிபட்டது!

விவசாயியின் வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்திய 7 அடி நீளமுள்ள கருநாகப் பாம்பை பாம்பு பிடிப்பவர் பத்திரமாக மீட்டார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:14 pm IST

விவசாயியின் வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்திய 7 அடி நீளமுள்ள கருநாகப் பாம்பை பாம்பு பிடிப்பவர் பத்திரமாக மீட்டார்.

ஈரோடு அடுத்த நசியனூர் முள்ளம்பட்டியைச் சேர்ந்தவர் திவாகர். புதன்கிழமை இரவு எதிர்பாராத விதமாக வீட்டினுள் இருந்து வித்தியாசமாக சத்தம் கேட்டு உள்ளது. அதிர்ந்து போன அவர் உள்ளே தேடிப் பார்த்ததில் ஏழு அடி நீளத்தில் பாம்பு ஒன்று கழிவறைக்குள் புகுந்து மறைந்து கொண்டது. உடனடியாக, ஈரோட்டைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் யுவராஜ், கழிவறைக்குள் புகுந்து அச்சுறுத்திய கருநாகப் பாம்பை பத்திரமாக மீட்டார். அதன் கோபத்தை தண்ணீர் ஊற்றி தணித்தார். அதனைத் தொடர்ந்து வனத்துறையிடம் பத்திரமாக கருநாகப் பாம்பு ஒப்படைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.