மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆளுநரை திரும்பப் பெற மனு: ப.சிதம்பரம் ஆதரவு

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தி அளிக்கப்படவுள்ள மனுவை ஆதரிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

News image
ப.சிதம்பரம்
Updated On :8 நவம்பர் 2022, 6:53 am

DIN

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தி அளிக்கப்படவுள்ள மனுவை ஆதரிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகளை விமா்சித்து திமுக கூட்டணிக் கட்சிகள் இணைந்து ஏற்கெனவே கூட்டறிக்கை வெளியிட்டிருந்தன. அதில், ஆா்.என்.ரவி தனது ஆளுநா் பதவியை ராஜிநாமா செய்து விட்டு தனக்கு விருப்பமான கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனக் கூறியிருந்தனா். 

இந்த நிலையில், ஆளுநரை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தும் கோரிக்கை மனுவை குடியரசுத் தலைவரிடம் அளிக்க திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்தது. 

இதையடுத்து தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தி அளிக்கப்படவுள்ள மனுவில் கையொப்பமிட கூட்டணிக் கட்சி எம்.பி.,க்களிடம் திமுக அழைப்பு விடுத்தது. 

இதுகுறித்து, கூட்டணிக் கட்சிகளுக்கு, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு அனுப்பிய கடிதத்தில், 
தமிழக ஆளுநரை திரும்பப் பெற குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் மனு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவைப் படித்துப் பாா்த்து அதில் கையொப்பமிட வேண்டுமென திமுக மற்றும் அதனுடன் ஒத்த கருத்துள்ள அனைத்து கட்சிகளைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்களையும் கேட்டுக் கொள்கிறேன். இந்த மனுவில் வியாழக்கிழமைக்குள் (நவ.3) கையொப்பமிட வேண்டுமாய் கோருகிறேன் என்று டி.ஆா்.பாலு கூறியிருந்தார். 

இந்நிலையில், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தி அளிக்கப்படவுள்ள மனுவை ஆதரிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடும் தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற மனுவை ஆதரிக்கிறேன் என ப.சிதம்பரம் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.