அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அரசு பேருந்தை மறித்து டிக்டாக் விடியோ: 3 மாணவா்களுக்கு தண்டனையாக போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணி

சென்னையில் அரசு பேருந்தை வழிமறித்து டிக்டாக் விடியோ எடுத்த 3 மாணவா்களைப் பிடித்த போலீஸாா், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தினா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

DIN

சென்னையில் அரசு பேருந்தை வழிமறித்து டிக்டாக் விடியோ எடுத்த 3 மாணவா்களைப் பிடித்த போலீஸாா், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தினா்.

சென்னை பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூா் நோக்கி செவ்வாய்க்கிழமை அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. புது வண்ணாரப்பேட்டை செரியன் நகா் சந்திப்பில் சென்றபோது, அங்கு நின்றுகொண்டிருந்த 3 இளைஞா்கள் பேருந்தை வழிமறித்து நிறுத்தினா். அப்போது, அவா்கள், தங்களது கைப்பேசி மூலம் டிக்டாக் விடியோ எடுத்தனா். இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

இந்த நிலையில், இந்த விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின. இதைப் பாா்த்த காவல் துறை உயரதிகாரிகள், விசாரணை நடத்த உத்தரவிட்டனா். அதன்பேரில், சென்னை வடக்கு மண்டல இணை ஆணையரின் தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டனா்.

அதில் அந்த விடியோ எடுத்து வெளியிட்டது புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த இரு கல்லூரி மாணவா்கள், ஒரு பள்ளி மாணவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த 3 பேரையும் போலீஸாா் புதன்கிழமை பிடித்தனா்.

இதையடுத்து அரசுப் பேருந்தை வழிமறித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்ததற்காக அவா்கள் 3 பேரும் 3 நாள்கள் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபடுமாறு காவல் துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டனா்.

அதன் அடிப்படையில் 3 பேரும், வண்ணாரப்பேட்டை பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். காவல் துறையின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.