மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னை கட்டட விபத்து: பலி 2 ஆக உயர்வு!

சென்னை செளகாா்பேட்டையில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. 

News image
Updated On :5 நவம்பர் 2022, 3:53 am

DIN

சென்னை செளகாா்பேட்டையில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னை செளகாா்பேட்டை ஏகாம்பரேஸ்வரா் அஹ்ரஹாரம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான தனியாா் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில் மருந்துக் கடை, மளிகைக் கடை, ஆடிட்டா் அலுவலகம் உள்பட 5 கடைகள் உள்ளன.

கட்டடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக முதல் தளத்தில் இருந்த வீடுகள் சில மாதங்களுக்கு முன்பு காலி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் முதல் தளத்தை யாரும் பயன்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தக் கட்டடம் வெள்ளிக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அங்கிருந்த மருந்துக் கடைக்கு வந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த உ.கங்குதேவி (60), மருந்தக உரிமையாளா் பெரும்பாக்கம் ஆலடி அம்மன் கோயிலைச் சோ்ந்த சங்கா் (36), கட்டடத்தின் அருகில் நின்றிருந்த மாதவரம், ராயல் அவென்யுவை சோ்ந்த சரவணன் (34), வியாசா்பாடியை சோ்ந்த சிவக்குமாா் (32) ஆகியோா் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனா். 

இதையடுத்து அங்கிருந்த மக்கள், கட்டட இடிபாடுகளிடையே சிக்கியவா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். தகவலறிந்த யானைக்கவுனி தீயணைப்புப் படையினா், அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிறிது நேரத்தில் கங்குதேவி அங்கு சடலமாக மீட்கப்பட்டாா்.

மேலும், சங்கா், சரவணன், சிவக்குமாா் ஆகிய 3 போ் பலத்த காயங்களுடன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சங்கர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து கட்டட விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து பூக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.