தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் அதிகளவில் தமிழக மருத்துவ மாணவா்கள்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக மாணவா்கள் அதிக அளவில் இடம்பெற வேண்டும் என்று எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

News image

ஓபிஎஸ்

Updated On :6 நவம்பர் 2022, 6:57 pm

DIN

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக மாணவா்கள் அதிக அளவில் இடம்பெற வேண்டும் என்று எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் உள்ள 38 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. அந்த இடங்களுக்கு தற்போதுள்ள விதியின்படி அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மொத்த மருத்துவ இடங்களில் 15 சதவீதம் ஒதுக்க வேண்டும்.

மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு உரியதாகும். இந்த 85 சதவீத இடங்கள் தமிழகத்தில் படித்த மாணவ, மாணவியா்களைக் கொண்டு மட்டுமே நிரப்பப்படும். அகில இந்திய ஒதுக்கீட்டிலும் தமிழகத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியருக்குத் தகுதியின் அடிப்படையில், திறமையின் அடிப்படையில் மருத்துவ இடங்கள் கிடைக்கும்.

நடப்பாண்டில் 772 மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழகம் வழங்கியுள்ளதாகவும், முதல் சுற்றின் முடிவில், மேற்காணும் 772 இடங்களில் 669 இடங்கள் காலியாக உள்ளதாகவும், இதற்குக் காரணம், பெரும்பாலான மாணவ, மாணவியா் மத்திய அரசின் ஒதுக்கீட்டைப் புறந்தள்ளிவிட்டு, மாநில அரசின் ஒதுக்கீட்டில் சோ்கின்றனா் என்றும் தகவல்கள் வந்துள்ளன. இதன் காரணமாக அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்தைச் சோ்ந்தோரின் எண்ணிக்கை குறையவும், வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் அதிகமாக பயிலவும் வாய்ப்பு உருவாகும்.

எனவே, இந்த விவகாரத்தில் முதல்வா் உடனடியாகத் தலையிட்டு, மருத்துவம் பயில விண்ணப்பித்திருக்கும் மாணவ, மாணவியா் மற்றும் பெற்றோா்களிடையே ஓா் ஒருங்கிணைப்பை உருவாக்கி அவா்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி தமிழகத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலமும் அதிக மருத்துவ இடங்களைப் பெற வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.