மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கல்லூரி பெண் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஓவர் கோட் அணிய வேண்டும்: உயர்கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி பெண் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஓவர் கோட் அணிய வேண்டும் என உயர் கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை கடிதம் எழுதி உள்ளது. 

News image
Updated On :19 நவம்பர் 2022, 5:56 am

DIN


சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி பெண் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஓவர் கோட் அணிய வேண்டும் என உயர் கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை கடிதம் எழுதி உள்ளது. 

சுதந்திரம் என்ற பெயரில் கண்ணியக்குறைவான ஆடைகளை அணியக் கூடாது. அவற்றை தவிர்க்க வேண்டும் என்ற கருத்து நடைமுறையில் இருந்து வரும் நிலையில், கல்லூரிகளில் பெண் விரிவுரையாளர்கள் ஓவர் கோட் அணிய வேண்டும் என உடை கட்டுப்பாட்டை அமலாக்க முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கல்லூரிகளில் பாடம் நடத்தும்போது பெண் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் சேலை அணிந்திருநாதால் அதனால் சில பிரச்னைகள் ஏற்படுகின்றன என கூறப்படுகிறது. 

இரு பாலினத்தவரும் படிக்கும் கல்லூரிகளில் கவனச் சிதறல் ஏற்பட இது வழி வகுக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. 

இப்பின்னணியில் பெண் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஓவர் கோட் அணிய வேண்டும் என உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

உயர் கல்வித்துறை கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும் என உயர் கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது. 

பெண் விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும் என உயர்கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது. 

விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கி அணிய வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

உயர்கல்வித்துறையில் இருந்து கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

இதுதொடர்பான உத்தரவு சம்மந்தப்பட்ட பேராசிரியைகள் மற்றும் விரிவுரையாளர்களின் கவனத்திற்கு வந்துள்ளது.

அரசு தரப்பின் அறிவுறுத்தலில் "டீசண்ட் டிரஸ்கோடு" என்ற வாசகம் தான் இடம் பெற்றுள்ளது என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்களின் சங்கத்தலைவர் டி.வீரமணி தெரிவித்துள்ளார். 

பள்ளிக்கூடங்களில் மாணவ,மாணவிகளுக்கு சீருடை கட்டுப்பாடு உள்ளது. பல கல்லூரிகளிலும் உடை கட்டுப்பாடு உள்ளது. கல்லூரி பெண் விரிவுரைவாளர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பெருமளவு உடை கட்டுப்பாடு இல்லை. இருப்பினும் பல கல்லூரிகளில் அறிவிக்கப்படாத உடை கட்டுப்பாடு உள்ளது என விரிவுரையாளர்கள் மற்றும்  பேராசிரியர்கள் கூறுகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.