பரமக்குடி அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் 3 பேர் பலி!
பரமக்குடி அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.


பரமக்குடி அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
சோமசுந்தரம் என்பவர் குடும்பத்துடன் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுவிட்டு, ராமநாதபுரம் நோக்கி காரில் சென்றுக்கொண்டிருந்தார். கார் பரமக்குடி அருகே அரியனேந்தல் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது எதிரே மதுரை நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து காரின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...