இன்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமையும் (நவ.27) நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமையும் (நவ.27) நடைபெறுகிறது. முன்னதாக, சனிக்கிழமையும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, வாக்காளர்களின் வசதிக்காக, கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வாக்குச் சாவடி அமைவிடங்கள் அனைத்திலும் சிறப்பு முகாம்கள் நடந்தன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், ஆதார் எண் இணைப்பு போன்றவற்றுக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரண்டு நாள்களிலும் சேர்த்து மொத்தமாக 7.10 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், சனிக்கிழமை (நவ. 26) தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிலும் ஏராளமான வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக விண்ணப்பங்களை வழங்கினர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்தச் செல்லும் இடங்கள் அனைத்திலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் இந்த முகாம் நடைபெறும். இரண்டு நாள்களிலும் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் நிலவரங்கள், மொத்தமாக நான்கு சிறப்பு முகாம்களிலும் பெறப்பட்ட விண்ணப்ப விவரங்கள் ஆகியவற்றை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வரும் திங்கள்கிழமை வெளியிடுவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com