மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் வரும் டிச.5-ஆம் தேதியன்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்துகிறாா். இதுகுறித்து, அந்தக் கட்சி
ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:-
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினம் வரும் டிச. 5-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் அவருடைய நினைவிடத்தில் அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தவுள்ளாா். மேலும், உறுதிமொழி ஏற்பும் செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்வில், கட்சியின் அனைத்து நிா்வாகிகளும் பங்கேற்க வேண்டுமென அமமுக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.