செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கெளரவ விரிவுரையாளர்களுக்கு இடமாற்ற கலந்தாய்வு: அமைச்சர் பொன்முடி

கெளரவ விரிவுரையாளர்களுக்கு இடமாற்ற கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :28 நவம்பர் 2022, 11:32 am

கெளரவ விரிவுரையாளர்களுக்கு இடமாற்ற கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி தெரிவித்ததாவது:

பேராசிரியர்களுக்கான கலந்தாய்வில் 580 பேர் இடமாற்றம் கோரி விண்ணப்பித்தள்ளனர். கெளரவ விரிவுரையாளர்களுக்கு இடமாற்ற கலந்தாய்வு நடைபெறும்.

மாநிலக் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விடுதி கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும். மாநிலக் கல்லூரியில் ரூ.63 கோடி மதிப்பீட்டில் அரங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விடுதி கட்டப்பட உள்ளது.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட மற்ற மசோதாக்களுக்கு ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என நம்புகிறோம் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.