புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விஜயதசமி... எழுத்தறிவிக்கும், வித்யாரம்பம் நிகழ்ச்சி! 

விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அதன் காரணமாக விஜயதசமி நாளில் குழந்தைகள் கல்வியை தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்

News image

சித்தாபுதூர் ஐயப்பன் கோயில் குழந்தைகளின் கல்வியை தொடங்கும் விதமாக வித்யாரம்பம் என்ற நிகழ்ச்சியில் குழந்தையின் விரலை பிடித்து  பச்சரியில்  ”ஓம்” எழுத வைக்கப்படுகிறது. 

Updated On :5 அக்டோபர் 2022, 5:01 am

DIN

விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அதன் காரணமாக விஜயதசமி நாளில் குழந்தைகள் கல்வியை தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பதால் இன்றைய நாளில் கல்வி கலைகளை கற்கத் தொடங்குகின்றனர்.  

Story image

குழந்தைகளின் கல்வியை தொடங்கும் விதமாக வித்யாரம்பம் என்ற நிகழ்ச்சியில் பச்சரிசியில் ஓம் எழுதும் குழந்தை.

இதன் ஓரு பகுதியாக கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் கோயில் குழந்தைகளின் கல்வியை தொடங்கும் விதமாக வித்யாரம்பம் என்ற நிகழ்ச்சியானது நடத்தப்பட்டு வருகிறது.

Story image

கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் கோயில் குழந்தைகளின் கல்வியை தொடங்கும் விதமாக வித்யாரம்பம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தை.

குழந்தைகளின் விரலை பிடித்து  ஹரி  ஸ்ரீ கணபதியே நமஹா  என எழுதியும் பச்சரியில்  ”ஓம்” என்றும் ”அம்மா” “ அப்பா” என்றும் விரல் பிடித்து குழந்தைகளை எழுத வைத்து கல்வியை விஜயதசமி நாளான புதன்கிழமை தொடங்கினர். இன்றை நாள் கல்வியை தொடங்கினால் குழந்தைகள் படிப்பில் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையால் கோயிலுக்கு அழைத்து வந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர். 

Story image

விஜயதசமி நாளில் குழந்தைகளின் விரலை பிடித்து  பச்சரியில்  ”ஓம்” என்றும் ”அம்மா” “ அப்பா” என்று எழுத வைக்கின்றனர்.

இதையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து  ஐயப்பன் கோயிலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.