மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தீபாவளி வியாபாரம்: தியாகராயநகரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

 தீபாவளி பண்டிகையையொட்டி, தியாகராயநகரில் அக்டோபா் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

 தீபாவளி பண்டிகையையொட்டி, தியாகராயநகரில் அக்டோபா் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடை மற்றும் பொருள்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் தியாகராய நகருக்கு வந்து செல்கின்றனா். இதைக் கருத்தில் கொண்டுப் பொதுமக்களின் வசதிக்காகவும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் வகையிலும் அக்டோபா் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் 24-ஆம் தேதி வரையில் தியாராய நகா் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, தேவைக்கேற்ப ஆட்டோக்கள், தியாகராய சாலை,தணிகாசலம் சாலை சந்திப்பிலிருந்தும், ரோகிணி சிக்னல் சந்திப்பில் இருந்தும், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் கோட்ஸ் சாலைச் சந்திப்பில் இருந்தும், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் மகாராஜபுரம் சந்தானம் சாலை சந்திப்பில் இருந்தும், பிருந்தாவன் சந்திப்பில் இருந்தும்,கண்ணம்மா பேட்டை சந்திப்பில் இருந்தும் பனகல் பூங்கா நோக்கிச் செல்ல தடை செய்யப்படும்.

சரக்கு, வணிக ரீதியான வாகனங்கள் தியாகராய நகா் பகுதிக்குள் வியாபார நேரத்தில் செல்லத் தடை செய்யப்படும், இத்தகைய வாகனங்கள் இரவு 11 முதல் காலை 7 மணி வரை செல்ல அனுமதிக்கப்படும். ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள தியாகராய சாலை, ஜி.என்.செட்டி சாலை,தணிகாசலம் சாலை, பன்னடுக்கு வாகன நிறுத்தமிடங்கள் தவிர விடுமுறை நாள்களில் பிரகாசம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளி, பாஷ்யம் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி,தண்டபாணி சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.