மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விளையாட்டு நகரம்: அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

விளையாட்டு நகரம் குறித்த முக்கிய அறிவிப்பை விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார்.

News image

அமைச்சர் மெய்யநாதன்

Updated On :6 அக்டோபர் 2022, 10:05 am

விளையாட்டு நகரம் குறித்த முக்கிய அறிவிப்பை விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இடம் கிடைக்காத பட்சத்தில் திருச்சியில் இடம் தேர்வு செய்து விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  செங்கிப்பட்டியில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ளது. விளையாட்டு நகரம் அமைக்க கண்டறியப்பட்டுள்ள இடம் குறித்து முதல்வரின் கவனுத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலகத் தரத்தில் விளையாட்டு கட்டமைப்பை ஏற்படுத்த விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் விளையாட்டு நகரம் குறித்த அறிவிப்பை அமைச்சர் மெய்யநாதன் தகவல் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.